Posts

Showing posts from August, 2020

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங் (சி. மோகன்)

Image
  ஒரு பிரதேசத்தில் மேய்ச்சல் சமூகம் விவசாய சமூகமாக மாற்றம் கொள்ளும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், அதன் மூலம்  ஏற்படும் சமூக, இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் "ஜியாங் ரோங்"ன் புனைவின் வழி சொல்லப்பட்டுள்ளது.   சீனாவில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து அதுவரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்கு, பழைய பழக்கவழக்கங்கள்  ஆகியவற்றை திருத்தி புதிய புரட்சி சிந்தனையை வளர்ப்பதின் அங்கமாக மூன்று சக மாணவர்களோடு ஜென் சென், மங்கோலியாவின் தொன்மையான மேய்ச்சல் நிலத்துக்கு சென்று அங்குள்ள மக்களோடு ஆடு மேய்க்கிறான்.   மேய்ச்சல் நிலத்தின் குடித்தலைவர் பில்ஜி. தந்தை போன்று  அவனுக்கு மேய்ச்சல் நிலத்தின் விழுமியங்களை கற்றுத்தருகிறார்.  "டெஞ்சர்" மேய்ச்சல் நிலத்தின் மலைக்கடவுள். ஓநாய்கள் அதன் பாதுகாவலர்கள்.  ஓலோன்புலாக் மேய்ச்சல் சமூகத்தின் உயிர்நாடியான புல் அங்கு பெரிய உயிராகவும் அதனைச் சார்ந்து  வாழ்பவை  சிறிய உயிர்களாகவும் இருக்கிறது.   மேச்சல் நி...

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

Image
உறவு என்பது ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளளது. இரண்டு நண்பர்கள் இடையிலும் கூட சார்பு நிலை இருக்கிறது.  சார்பு என்பது பொருள், உறவு, அன்பு முதலிய எதையும் குறிக்கலாம்.  எங்கெல்லாம் உயிர் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறதோ அங்கு இயல்பாகவே ஒருவகையான கொடுக்கல் வாங்கல் அமைந்துவிடுகிறது. அந்த கொடுக்கல் வாங்கல் எப்போதும் வாழ்க்கையில் சம மதிப்பு பெறுவதில்லை.  மதிப்பு என்பது நேரத்தைப் பொறுத்து, இடத்தைப் பொறுத்து மாறுபடும் இயல்பைக் கொண்டது.  எங்கு சமச்சீரற்ற கொடுக்கல் வாங்கல் நடக்கிறதோ அங்கே இயல்பான மேல் கீழ் படிநிலை அமைந்து விடுகிறது.  ஒருவரை ஒருவர் சார்ந்து கொள்ளாமல் உறவு சாத்தியமா. சார்பற்ற உறவு ஒன்று இருக்கிறதா.  திருமண உறவில் இந்த சோதனை முயற்சி தான்  நாவல். கல்யாணி பொதுவாழ்வில் பிறருக்காக நடிப்பவள். ஒரு நாடக நடிகை.  ரங்கா பத்திரிகை எழுத்தாளன். நாடகங்களை விமர்சனம் செய்பவன். தொழிலில் நேர்மையாகவும், மிக கராறாகவும் விமர்சனம் செய்பவன் என்று பெயர்பெற்றவன். அதாவது தொழிலில் நடிக்காதவன், சமரசம் செய்துகொள்ளாதவன். தன்னளவே இருவரும் சுதந்திர வாழ்க்கை வாழ்பவர்கள். ...