Posts

Showing posts from 2016

உன்னால் முடியும்: சொந்த தொழில்தான் நிம்மதி கொடுத்தது

Image
   பெரிய நிறுவனத்தில், நல்ல சம்பளத் தில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம், நிறுவனத்தை மூடப்போகிறார்கள் என்றால் என்ன செய் வீர்கள்.. சென்னை நோக்கியா நிறுவனத்தில் வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒரே நாளில் வேலை போனது. உறக்கமும் போனது. அதில் ஒருவர்தான் துரை ராஜலிங்கம். புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இவர். திடீரென வேலை இழந்த நிலையில், நிலைகுலையாமல் நிதானமாக யோசித்து மாற்று தொழிலை தேர்ந்தெடுத்தவர். இன்று 6 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு நோக்கியா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 5 ஆண்டுகளாக வேலைபார்த்துக் கொண்டிருந்த நிலையில், மைக்ரோசாப்ட் அந்த நிறுவனத்தை வாங்கிய பிறகு சென்னை ஆலையை மூட திட்டமிட்டனர். பல ஆயிரம் பணியாளர்களுக்கு ஒரு சில நாட்களிலேயே செட்டில்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினர். இதுதான் வாழ்வாதாரம் என எண்ணிக் கொண்டிருந்த ஒரு வேலையை நாளையிலிருந்து பார்க்க முடியாது என்றால் எப்படி இருக்கும். ஒரே ந...

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் - ஜெயமோகன்

தமிழில் சிறந்த கதைகள் - ஜெயமோகன்  1 அ. மாதவையா 1 கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை] 2 சுப்ரமணிய பாரதி 1 ரயில்வே ஸ்தானம் 3 புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன்கதைகள். காலச்சுவடு] 1 கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், 2 கயிற்றரவு 3 செல்லம்மாள் 4 சிற்பியின்நரகம் 5 கபாடபுரம் 6 ஒருநாள்கழிந்தது 7 அன்றிரவு 8 சாமியாரும் குழந்தையும் சீடையும் 9 காலனும் கிழவியும் 10 சாபவிமோசனம் 11 வேதாளம் சொன்ன கதை 12 பால்வண்ணம் பிள்ளை 4 மௌனி [மௌனியின் கதைகள் ] 1அழியாச்சுடர் 2பிரபஞ்ச கானம் 3.மாறுதல் 5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ] 1.சிறிதுவெளிச்சம் 2.விடியுமா 3.ஆற்றாமை 4.பண்னைச்செங்கான் 6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்] 1 காவல் 2 அடகு 3 விதைநெல் 4 ஒருநாள் 5 தாய் 6 ஞானப்பால் 7 எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி] 1 மீன்சாமியார் 2 பொன்மணல் 8. சி.சு.செல்லப்பா 1 சரசாவின் பொம்மை 2 வெள்ளை 9 க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா] 1.தெய்வ ஜனனம் 10 லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ] 1 பாற்கடல் 2 பச்சைக்கனவு 3 ஜனன...

ஜல்லிக்கட்டு ஒழிப்பா நாட்டுமாடு அழிப்பா?

Image
தற்போது பரபரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவாதத்தில் பெரும்பாலும் ஆதரவு குரல் கொடுப்பவர்கள் மாடு வளர்ப்பவர்கலாகவோ, விவசாயம் சார்ந்த தொழிற் குடும்பத்தினராகவோ இருக்கிறார்கள். எதிர் குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் விவசாயத்திற்கு சம்பந்தம் இல்லாத தொழில் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள்.  நான் சிறுவனாக இருக்கும் பொழுது “மாடு பிடி” என்று ஒரு நிகழ்வு இருக்கும். தை பொங்கலுக்கு பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் பொது பெரிய பெரிய வடங்களை கடைகளில் வாங்கி காளைகளை பிடித்து வருவார்கள். சில மாடுகளை வீட்டு பெண்கள் தடவி கொடுத்து பிடித்து வருவது எங்களின் அதிக நாட்களின் பேசு பொருளாக இருக்கும்.  பிடித்து வந்த காளைகளை தனியாக “தொளுவுகளில்” அடைத்திருப்பார்கள். அதற்கு ஒன்றிரண்டு மதங்களுக்கு முன்பே “மலை” மாடுகளை மலைகளிலிருந்து காடுகளில் “கிடை” அமத்தி இருப்பார்கள். ஜல்லிக்கட்டின் முதல் நாள் எல்லா “பளிஞ்சி” மாடுகளையும் வாடிவாசல் வழியாக ஓட விடுவார்கள். அன்று பெரிய காளைகள் வராது எனவே சிறிய “காளைகள்” கன்று குட்டிகளை “அணைந்து” பயிற்சி கொள்வார்கள் . ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் “அணை கொடுத்த” ம...

பருப்பு விலையேற்றமும் சென்னை வெள்ளமும்

Image
இன்று தங்களது உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் பொதுமக்களில் பெரும்பன்மையனவர்கள் தங்களது பிழைப்புக்கான செயலகங்கள் திறக்கப்படும்போது சென்றுவிடுவார்கள் என்பது உறுதி.   அங்குதான் அவர்கள் இந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக இன்னும் பல மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். இது ஒரு குழி , இதை சுற்றி சுற்றித்தான் வந்ததாகவேண்டும். உடனடி பயன்தராத எதனைம் வைத்துக்கொளுமளவு மக்களுக்கு இன்று நேரமில்லாமல் போய்விட்டது.   இன்றைய பொருளாதார சூழலில் குறிப்பாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் குடும்பத்தோடு செலவிடுவதற்கான நேரத்தையும் நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்வதில் வியப்பேதும் இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த சுழலில் அவர்களுக்கு பொதுநலம் குறித்து சிந்திக்கவும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடவும் அழைப்பது அவர்களின் பிழைப்புக்கு வேட்டுவைப்பதாக மட்டுமே அமையும்.   பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்களும் பிழைப்புக்காக ஆக்கிரமிபவர்களே என்பதையும் கொஞ்சம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். வைரமுத்து சொன்னதுபோல் " வயிற்றுக்காக வாழ்பவர்கள்" அவர்களின் வாழ்க்...