Posts

Showing posts from September, 2020

இலக்கிய வாசகனின் பயிற்சி - ஜெயமோகன்

Image
  அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். “ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும், மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை. அடுத்ததாக ஒரு மாற்றத்திற்கு பாலகுமாரன் அவர்களின் “அகல்யா” எடுத்தேன். முன்பு பதினைந்து வருடங்களுக்கு முன்பு அகல்யாவை வாசித்திருந்தேன். அன்று என்னை மிகப் பாதித்த கதை. இன்றும் சிவசு, அகல்யாவின் காதலும் அவ்வப்போது வரும் மோகமும் என்னை வசீகரித்தது. ஆனால் இப்போது சிவசு மற்றும் அகல்யாவின் கதை  கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கனவுத்தன்மையுள்ள உறவை சிவசு அகல்யாவின் மூலம் நாவ...

நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.

Image
நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா. இயற்கையில் உள்ள பொருளாதாரத்தை ஐந்து வகையாகப் பகுக்கிறார்.  1. புல்லுருவிப் பொருளாதாரம் - தனது (உணவுத்) தேவைக்காக அடுத்த உயிரினத்தை அழிக்கும் வகையான பொருளாதாரம். எடுத்துக் காட்டாக சாருவுண்ணும் செடிகள் (parasitic), காட்டில் வசிக்கும் புலி முதலியன.  2. கொள்ளைப் பெருளாதாரம் - ஒன்று தான் மட்டும் பயனடைந்து மற்றவற்றிற்கு எந்த பயனையும் அளிக்காத வகை. எடுத்துக் காட்டாக குரங்கு காட்டில் வாழ்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் முறை.  3. துணிவும் முயற்சியும் கொண்ட பொருளாதாரம் - தான் எடுத்துக் கொண்ட ஒன்றிற்கு பதிலாக வேறு ஒரு உதவியை கொடுக்கும் வகை. உதாரணமாக, தேனீக்கள் பூக்களில் தேனை எடுத்து பின் அதன் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.  4. இணைந்து வாழும் பொருளாதாரம் - கூட்டமாக அதன் மொத்த இனத்தின் நன்மைக்காக வாழும் வாழ்க்கை - உதாரணம் தேனீக்கள்.  5. சேவைப் பொருளாதாரம் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்  உலக நன்மைக்கும் எதிர்கால தேவைக்கும் உழைக்கும் உயர்ந்த வழிப் பொருளாதாரமாகும் .  இவற்றில் ஒவ்வொன்றையும் விளக்குக...